
என் கேள்விக்கு என்ன பதில்!!!
.jpeg)
ஜெய் : டைகர் அண்ணாச்சி, எழுந்திரு?
டைகர் : ம்ம்...( ஆரம்பிச்சிட்டான் ) என்ன வேணும் ?
ஜெய் : டைகர், அது வந்து கடுகு ஏன் உருண்டையா இருக்கு? எண்ணெயில் போட்டா ஏன் வெடிக்குது?....
டைகர் : முதல்ல காலை எழுந்ததும் பல் விளக்ககோணும் என்று எத்தனை வாட்டி சொல்லியிருக்கேன்.
ஜெய் : சரி. நீ இங்கேயே இரு. ஒரு நொடியிலை வந்திடுவேன்.
டைகர் : நீ மெதுவா வா. ( அதற்குள் எங்கையாவது எஸ்கேப் ஆயிடுவேன். )
ஜெய் : ஆகா! எனக்கு உன்னைத் தெரியாதா? இரு உன்னை இந்த கட்டில் காலோடு கட்டிப் போடுறேன்.
டைகர் : ( மனதினுள் ) விவரமான பொடியன் தான்.
ஜெய் : சரி. இப்ப சொல்லு டைகர்?
டைகர் : அதுவா! தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் சண்டை வந்தபோது இந்த கடுகினை தான் ஆயுதமாக பாவித்தார்களாம். ஒரு பாட்டி இப்படி சின்ன சின்ன உருண்டைகளாக உருட்டிக் கொடுக்க, தேவர்கள் அதை கொதிக்கும் எண்ணெயில் போட்டு அசுரர்கள் மீது கொட்டினார்களாம்.
ஜெய் : தேவர்கள் என்றால் யார்?
டைகர் : குட் ஹைஸ் அதாவது நல்ல பசங்க.
ஜெய் : அப்ப அசுரர்கள் கெட்ட பசங்களா, ஜெய் ?
அப்ப இந்த கடுகினை உருண்டைகளாக உருட்டியது அந்த பாட்டிதானா? ஏன் வெடிக்குது?
டைகர் : அதுவா. தண்ணீர் சேர்த்து உருட்டி இருப்பாங்க அதான்.
ஜெய் : பூசனிக்காயும் அப்படி தானே வந்திச்சு, டைகர்?
டைகர் : ம்ம்..
ஜெய் : அப்ப அவங்க ஏன் புடலங்காயை உருட்டவில்லை?
டைகர் : ( மனதினுள் ) ஐயோ! இவன் தொல்லை தாங்க முடியலை. ஒரு நாள் அழுதிட்டு இருந்தான். ஏன் ராசா அழுவுறே என்று கேட்டேன். அன்றிலிருந்து ஆரம்பமாச்சு இவன் தொல்லை.
ஜெய் : டைகர், நீ சரியான லூசு. உனக்கு எதுவுமே தெரியாது.
டைகர் : ம்ம்.. நீ சொன்னா சரி தான்.
ஜெய் : நிலக்கடலை நிலத்தின் கீழே தானே வளருது...
டைகர் : ஆமாப்பா.
ஜெய் : அதை நிலக்கிழங்கு என்று சொல்லலாமே? ஏன் கடலை என்று பெயர் வந்திச்சு?
டைகர் : கொர்ர்ர்ர்ர்ர்......
ஜெய் : டைகர், என்ன தூங்கிட்டியா?
ஜெய் : இவனுக்கு எப்ப பாரு தூக்கம். இதில் இந்த 'இட்லி' தங்கமணி, பேபி அதிரா இருவரும் சில கேள்விகள் கேட்டிருந்தார்கள். டைகரிடம் தான் கேட்க வேண்டும்.
டைகர், எழும்பு! தூக்கம் போதும்.
அந்த நேரம் போன் அலறுகிறது.
ஜெய் : யாருப்பா அது? ஓ ப்ளாக் எழுதப் போறீங்களா? எடிட் html ஐ க்ளிக் பண்ணி, காப்பி பண்ணி, வேறு எங்கையாவது பத்திரமா வைச்சுக்கோ என்ன? கம்யூட்டரில் ஏதாவது சந்தேகம் இருந்தா என்னைக் கேளு சரியா? வரட்டா.
டைகர் : ( மனதினுள் ) இதெல்லாம் நல்லா சொல்றான். ஆனால் என்னைக் கண்டால் மட்டும் குண்டக்க மண்டக்காவா பேசுறான்.
ஜெய் : டைகர், தங்கமணிக்கு ஏன் இட்லி சரியாவே வரமாட்டேன் என்கிறது? இமாவின் காமரா ஏன் கீழே விழுந்து உடைஞ்சு போச்சு? அதிரா ஏன் எப்போது பூனை மாதிரி கத்துறாங்க? எல்கே எப்படி சூறாவளி போல சுழன்று சுழன்று பின்னூட்டம் போடுகின்றார்? சந்தனா, அதிரா, இமா மூவரும் ஏன் ஏட்டிக்கு போட்டியா பதிவுகள் போடுறாங்க??? ஏன் ஏன் ஏன் ??
அடுத்த நாள் காலை.
ஜெய் : டைகர், இங்கே வா? மணி 8 ஆச்சு டைகரை காணவில்லை. இங்கே ஒரு கடிதம் இருக்கே .
" என்னை யாரும் தேடி வர வேண்டாம். வந்தால் கடிச்சு குதறிடுவேன். சாக்கிரதை - இப்படிக்கு டைகர்.
ஜெய் : பாவம் டைகர். என்னாச்சு இவனுக்கு? நேற்றுக் கூட நல்லா பேசிட்டு இருந்தானே. என் கேள்விகளுக்கு பதில் சொல்லாமலே பூட்டானே. பாவிப் பயல்.

டைகர்: ( மனதினுள் ) அப்பாடா! இப்ப தான் நிம்மதியா இருக்கு. இப்படி ஆள்மாறாட்டம் பண்ணியதால் தான் தப்பிச்சேன். இல்லாவிட்டால் என் கதி அதோ கதி தான்.
( இந்த கதையில் வரும் ஜெய்... ஜெய்லானி அல்ல. ஒரு கற்பனை பாத்திரம். அவ்வளவே! )