
1. வலைப்பதிவில் தோன்றும் உங்கள் பெயர்?
வானதி அல்லது வாணி இரண்டுமே என் பெயர்கள் தான். என் பெயரில் இருக்கும் இன்னொருவரை நான் இது வரை சந்தித்தது குறைவு. யுனீக் ஆக இருக்கட்டுமே என்று அப்படியே மெயின்டேன் பண்றேன்.
2. அந்தப் பெயர் தான் உங்கள் உண்மையான பெயரா?
என்னப்பா! நான் இவ்வளவு வெளிப்படையா சொன்ன பிறகு... .... உண்மைப் பெயரே தான்.
3. நீங்கள் தமிழ் வலைப்பதிவு உலகில் காலடி எடுத்துவைத்ததைப் பற்றி..
காலடி எடுத்து வைத்தது...ம்ம்.. சும்மா பொழுது போக்கிற்கு தான் வலைப்பூ தொடங்கினேன். எப்போதும் பிள்ளைகள், கணவரின் வேலைகள் என்று இருந்ததால் கொஞ்சம் ஓய்வு தேவைப்பட்டது. பிள்ளைகள் படுத்த பின்னர் ஏதாவது கிறுக்கித் தள்ளுவேன். அதை அப்படியே வலைப்பூவில் போட்டேன். இது தான் நான் வலைப்பூவில் காலடி எடுத்து வைச்ச வரலாறு.
4. உங்கள் வலைப்பதிவை பிரபலமடையச் செய்ய என்ன என்னென்னவெல்லாம் செய்தீர்கள்?
மற்றவர்களுக்கு கமென்ட் ( நேரம் கிடைக்கும் போது ) போடுவது, இன்ட்லியில் இணைந்தது இவை மூலம் கொஞ்சம் பிரபலமானேன் என்று நினைக்கிறேன். ஆனால், நேரம் குறைவாக இருப்பதால் எல்லா வலைப்பூக்களையும் பார்வையிட முடிவதில்லை.
5. வலைப்பதிவின் மூலம் உங்கள் சொந்த விஷயத்தை பகிர்ந்து கொண்டதுண்டா?
சொந்தக் கதை, கற்பனை என்று எல்லாமே இருக்கு என் வலைப்பூவில்.
6. நீங்கள் பொழுதுபோக்குக்காக பதிவுகளை எழுதுகிறீர்களா? அல்லது பதிவுகளின் மூலம் சம்பாதிப்பதற்காகவா?
இருங்க சொல்றேன்.
இந்த வலைப்பூ வருமானத்தில் என் கணவரை கண்கலங்காமல் வைச்சு காப்பாத்தறேன்.
வெள்ளை மாளிகை ( அதாங்க நம்ம ஓபாமா வீடு ) போல் ஒரு( கொஞ்சம் மங்கலான கலரில்) வீடு வாங்க முற்பணம் செலுத்தி விட்டேன்.
இன்னும் இருக்கு அப்புறம் இன்கம்டாக்ஸ் பிரச்சினை வந்தா. அதான் கொஞ்சம் அடக்கி வாசிக்கிறேன்.
எல்லாம் சும்மா பொழுது போக்கிற்காக தான் எழுதுகிறேன்.
7. நீங்கள் மொத்தம் எத்தனை வலைப்பதிவுகளுக்கு சொந்தக்காரர்? அதில் எத்தனை தமிழ் வலைப்பதிவுகள் உள்ளன?
இதை வச்சு சமாளிக்கவே நேரம் பத்தவில்லை. இதில் இன்னொன்றா? தாங்காது.
8. மற்ற பதிவர்கள் மீது எப்போதாவது உங்களுக்கு கோபம்..
கோபம், பொறாமை, ஆத்திரம் எல்லாம் கடந்தவள் நான். அதாவது ஒரு ஞானிக்குரிய மனப்பக்குவம் அடைந்து விட்டேன்.
வலைப்பூவில் சண்டை போடுபவர்கள், மற்றவர்களை மறைமுகமாக தாக்குபவர்களை பிடிக்காது.
9. உங்கள் பதிவை பற்றி முதன் முதலில் உங்களை தொடர்புகொண்டு பாராட்டிய மனிதர் யார்?
அண்ணாமலையான் தான் என்னை முதன் முதலாக பாராட்டியவர்.நிறைய தோழிகள், இனிமையான நட்புகள் என்று என் நட்பு வட்டம் பெருகியது. இமா, மகி இருவரும் தனிப்பட்ட முறையிலும் நிறைய ஊக்கம் கொடுத்தார்கள். அறுசுவைக்கு என் கதை அனுப்பியதில் இமாவின் பங்கு நிறைய உண்டு. மற்றவர்களுக்கு பின்னூட்டம் கொடுக்கவே ப்ளாக் தொடங்கினேன்.பிறகு சமையல் குறிப்புகள் கொடுக்க ஆரம்பித்தேன். பிறகு க்ராப்ஃட், கதைகள் என்று சாம்பாராக மாற்றி விட்டேன். என்னிடம் ப்ளாக் இருப்பதே பலருக்கு நீண்ட நாட்கள் கழித்தே தெரிய வந்த...( யாருப்பா அது கொட்டாவி விடுறது...) சரி இன்னும் சொல்லி போரடிக்க விரும்பவில்லை.
10. கடைசியாக, விருப்பம் இருந்தால் உங்களைப் பற்றி பதிவுலகத்துக்கு தெரிய வேண்டிய அனைத்தையும் பற்றி கூறுங்கள்..
அப்படியே 1 இலிருந்து 9 வரை கேள்விகளுக்கான விடைகளை மீண்டும் படித்துப் பாருங்க. அப்பவும் விளங்காவிடில் மீண்டும் 1....9 . ஸ்ஸ்ஸ் அப்பா முடியலை.